பரிபாடல் - 14. செவ்வேள்
(பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப்
பரவுவாளாய், 'இம் பருவத்தே தலைமகன்
வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
பாடியவர் :: கேசவனார்
இசையமைத்தவர் :: கேசவனார்
பண் :: நோதிறம்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே; தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே; அடியுறைமகளிர் ஆடும் தோளே, |
5 |
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே; வாகை ஒண் பூப் புரையும் முச்சிய தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை, 'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே; நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; |
10 |
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின, அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப; நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும், விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் |
15 |
பவழத்து அன்ன வெம் பூத் தாஅய், கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து, |
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே! கறை இல் கார் மழை பொங்கி அன்ன நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! |
20 |
அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே! பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் |
25 |
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே! இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து, ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!-- |
விண்ணப்பம்
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை, துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவை ஆகுக-- தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! |
32 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல், Paripadal, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின்னை, அமர்ந்தோயே, கார், போன்றனவே, பெயர், இன்னும், நின், பிறந்த, நீர், குரல், கேசவனார், அன்ன