நற்றிணை - 97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
5 |
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனி மட மகளே. |
தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தௌ¤ந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ?
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. - மாறன் வழுதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மிகக், கொள்ளீரோ, யாறு, நீர்