நற்றிணை - 93. குறிஞ்சி
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, வரை வெள் அருவி மாலையின் இழிதர, கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும் மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! |
5 |
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள் பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் |
10 |
மயிர்க் கண் முரசினோரும் முன் உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே. |
கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள்¢ மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்;
வரைவு கடாயது. - மலையனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின், நாண், பூண், உடைய, பெரிய, நிற்கும், குறுமகள், நல்கூர், மறைத்த, மருங்கு, திருந்து, இழைப், அருவி, நுசுப்பின்