நற்றிணை - 363. நெய்தல்
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
5 |
வம்மோ- தோழி!- மலி நீர்ச் சேர்ப்ப- பைந் தழை சிதைய, கோதை வாட, நன்னர் மாலை, நெருநை, நின்னொடு சில விளங்கு எல் வளை ஞெகிழ, அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. |
10 |
நிரம்பிய கடல் நீர் பரவிய நெய்தனிலத் தலைவனே!; உடுத்திருந்த பசிய தழையுடை சிதைய மலர்மாலை வாடச் சிலவாகிய விளங்கிய ஒளி பொருந்திய வளைகள் கழல; நன்றாக நேற்று மாலைப்பொழுது நின்னொடு அலவனைப் பிடித்தாட்டிய என் தோழியினுடைய; சிலம்பு உடைபட்டதனாலே; கண்டல் மரங்களை வேலியாகவுடைய புறத்தே கழி சூழ்ந்த கொல்லைகளையுடைய தௌ¤ந்த நல்ல கடல் நாட்டுத் தலைவன் யானென; நெறிகொண்டு போயினையாயின்; எத்துணையளவேனும் தான் செய்யும் மிக்க கம்மத் தொழிலில் வருத்தமுறாத கெடுதலில்லாத கம்மியன்; கலன் பொறியற்றுப் போயின் இணைத்துச் சந்து ஊதிக் கூட்டுதற்கு மண் கட்டவேண்டியதன்றே; அங்ஙனம் கட்டுதற்குத் துறையிலுள்ள மணலைக் கொண்டுவந்து தந்து செல்வாயாக!
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்தது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 361 | 362 | 363 | 364 | 365 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, கடல், சிதைய, சிலம்பு, நின்னொடு, கம்மியன், யான், கொண்டு, கண்டல்