நற்றிணை - 357. குறிஞ்சி
நின் குறிப்பு எவனோ?- தோழி!- என் குறிப்பு என்னொடு நிலையாதுஆயினும், என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே- சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன், பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் |
5 |
பீலி மஞ்ஞை ஆலும் சோலை, அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி, நீர் அலைக் கலைஇய கண்ணிச் சாரல் நாடனொடு ஆடிய நாளே. |
10 |
தோழீ! என் கருத்தானது என்னோடு பொருந்தாதாயினும:¢ சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் ஆகாயத்தில் உயர்ந்து நன்றாகத் தோன்றுகின்ற மலையின் பக்கத்தில்; மழைபெய்யுமளவில் அம் மழையிலே நனைந்து மயிர் சிலிர்த்த நீலமணிபோன்ற புள்ளிகளையுடைய குடுமியையும் பீலியையுமுடைய மயில் சென்று; உலாவி வருகின்ற சோலை சூழ்ந்த அழகிய இடமகன்ற கற்பாறையில் உற்ற அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனையிடத்துள்ள; மையுண்ட கண்ணையொத்த குவளைமலர்களைக் கொய்து; நீராடும்பொழுது அந்நீர் அலைத்தலானே குலைந்த மாலையையுடைய சாரல் நாடனுடனே; அருவியில் ஆடிய நாளினை நினைந்து; எக்காலத்தும் நெஞ்சைப் புண்படுத்திக் கொண்டு கெட்டொழிய அறியாததாயிராநின்றது; அது காரணமாக நின் கருத்துத்தான் எவ்வாறுளதோ? அதனைக் கூறிக்காண்
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - குறமகள் குறியெயினி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 355 | 356 | 357 | 358 | 359 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கவாஅன், சோலை, சாரல், ஆடிய, குன்றத்துக், தோன்றும், குறிப்பு, சேண், உறத், நின்