நற்றிணை - 348. நெய்தல்
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
5 |
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? |
10 |
நிலவோவெனில். நீல நிறமுடைய ஆகாயத்திலே பலவாய கதிர்களைப் பரப்பி; பால் நிரம்பிய கடல் போலப் பரந்துபட்ட தன்மையதாயிராநின்றது; இந் நிலா நாளில் இவ்வூரோவெனில் தழைத்துவரும் பேர் ஒலியுடனே நிறைந்து ஒருசேரக் கூடி ஓசைமிக்க தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மையதாயிராநின்றது; காடோவெனில் மலர்ந்த பூ விளங்கிய சோலையினிடங்கள் தோறும் தாம்தாம் விரும்பி யொழுகும் பெண் வண்டுடனே ஆண்வண்டுகள் ஒலி செய்யாநின்றன; இன்னதொரு பொழுதிலே யானொருத்தியே அணிந்த கலன்களை நெகிழ விடுத்த தனிமையுடனே கொண்ட வருத்தத்தொடு மிக்க நீடிய கங்குல் முழுவதும் கண்கள் துயின்றிலேன்; ஆதலின் இங்ஙனம் எல்லார் செயலுக்கும் மாறுபாடாக யானிருத்தலால்; இவ்வுலகம் என்னொடு போர் செய்து என்னை ஒழியப் பண்ணுமோ?; அன்றி யாதொரு பயனுமில்லாத எனது நெஞ்சம்; தன் செயலுக்கு மாறுபாடாயிராநின்றது இவ்வுலகம் என்று உலகத்தோடு போர் செய்ய எழுமோ? ஒன்றுந் தோன்ற வில்லையே?
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது. - வெள்ளி வீதியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 346 | 347 | 348 | 349 | 350 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவ்வுலகம், போர், தன்மையதாயிராநின்றது, பொரும்கொல், பால், என்னொடு, பரப்பி