நற்றிணை - 339. குறிஞ்சி
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள்போலும், அன்னை- சிறந்த |
5 |
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, மின் நேர் ஓதி இவளொடு, நாளை, பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
10 |
தெண் நீர் மணிச் சுனை ஆடின், என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? |
தோழீ! அன்னையானவள் சிறந்த அழகு விளங்கிய அகன்ற நமது மாளிகையின்கண்ணே இன்று வந்தனள், அங்ஙனம் வந்தவள் அன்போடு தழுவி மகிழ்ந்து ("நின் தோழி சூடிய மாலை கலைந்து தோற்றப் பொலிவும் வேறுபட்டிருப்பதன் காரணந்தான் யாது?" என வினவ; யானும் என்னோடு இவள் இன்று சுனையாடினள் ஆதலின் இ¢வ் வேறுபாடுகள் உண்டாயின என்று கூறினேனாக; அவற்றை வேறாகக் கொண்டு சுனையாடும் பொழுது; நீர் மோதி அலைத்தலானே கலைந்து போகிய குளிர்ச்சியுற்ற மலர்மாலையையும் ஒள்ளிய நுதலையுமுடைய; பெதும்பைப் பருவத்தின் நல்ல நலனைப் பெற்றுக் கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவளுடனே; நாளைப் பொழுதிலே பலவாகிய மலர் விளங்கிய மணங் கமழ்கின்ற மருத வைப்புப் போன்ற தௌ¤ந்த நீரையுடைய அழகிய சுனையிடத்து ஆடினால்; மகளிர் மேனியின் நிறம் இன்னும் எப்படியாமோ? என்று கூறினாள்; ஆதலால் பகைப்புலத்து வென்றி பெறுவதொன்றேயன்றித் தோல்வியுறாத நங் காதலர் நம்மைக் கைவிட்டு இனி அருள் செய்பவரல்லர்; அவருடனிகழ்ந்த இக் களவொழுக்கமானது புறத்தார்க்குப் புலனாகி அலர்தூற்றுந் தன்மையை எய்துமன்றோ? என்று; பெரிதும் வாட்டமுற்று நம்முள்ளத்துடனே புதியனவாய்¢ச் சிலவற்றைக் கூறி; நாம் இருவரும் துன்பவெள்ளத்து நீந்துகின்றதனை அவ்வன்னை அறிந்து கொண்டனள் போலும்;
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 337 | 338 | 339 | 340 | 341 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, நீர், இன்று, கலைந்து, போன்ற, விளங்கிய, மலர், சிறந்த, காதலர், கூறி