நற்றிணை - 336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
5 |
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்- அரவின் ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, இரை தேர் எண்கினம் அகழும் |
10 |
வரை சேர் சிறு நெறி வாராதீமே! |
சிலிர்த்த மயிர் மிக்க பிடரினையுடைய ஆண்பன்றி; தோலாய் வற்றிய கொங்கையையுடைய பெண்பன்றியுடனே சென்று திரண்ட அடித்தண்டுடைய தினைக் கதிரை அளவின்றித் தின்றழித்ததனாலே; கானவன் மலைவழியிலுள்ள செல்லுதற்கரிய சிறிய புழையருகிலே பதுங்கியிருந்து; வில்லினால் எய்து கொன்று தந்த வெளிய கோட்டினையுடைய அவ்வாண் பன்றியை; அலங்கரித்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்துத் தன்சுற்றமாகிய குடிகள் இருக்குமிடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடாநிற்கும்; நெடிய மலை நாடனே!; மிக்க வலிய சினமுடைய களிற்றியானை அங்கு வருகின்ற புலியின் வருகையை எதிர்ப்பார்த்து நிற்கும் இரவின்கண்ணே; நீ இங்கு வருதலை அஞ்சுகின்றனையல்லை; அதனை நினையாமுன் யான் அஞ்சாநிற்பேன்; ஆதலின் பாம்பு உறைகின்ற ஈரிய புழையையுடைய புற்றை மேகம் போலச் சூழ்ந்துகொண்டு இரையிருப்பதனை யாராய்கின்ற கரடியின்¢ கூட்டம் பறித்து எடாநிற்கும்; மலையையடுத்த சிறிய நெறியில் இனி வாராதொழிவாய்காண்!;
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 334 | 335 | 336 | 337 | 338 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறிய, சென்று, மிக்க, தந்த, கானவன்