நற்றிணை - 321. முல்லை
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர, கான முல்லைக் கய வாய் அலரி பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய, கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை, |
5 |
புல்லென் வறு மனை நோக்கி, மெல்ல வருந்தும்கொல்லோ, திருந்துஇழை அரிவை? வல்லைக் கடவுமதி தேரே; சென்றிக, குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற, பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே. |
10 |
திருத்தமாகச் செய்த கலன் அணிந்த என் காதலி; சிவந்த நிலத்தையுடைய காட்டின்கண்ணே சிறிய மயிரையுடைய யாடுகளின் தௌ¤ந்த ஓசையினிய மணிகளைக் கழுத்திலே பூட்டப்பட்ட கூட்டமெல்லாம் தாம் மேய்வதையொழித்துத் தொழுவம் புகுமாறு பெயராநிற்ப; கானத்தின்கண் உள்ள முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைச் சாரலின் புறத்து உள்ள பார்ப்பன மகளிர் பறித்துச் சூடாநிற்ப; ஆதித்த மண்டிலம் அத்தமனக் குன்றை அடைகின்ற ஒளி மழுங்கிய மாலைப் பொழுதில்; யான் இல்லாமையால் புல்லென்ற வறுவிய மாளிகையை நோக்கி மெல்ல வருந்தாநிற்பளோ?; பாகனே! நமது தேரை விரைவிலே செலுத்திக் காண்!; சென்று அழகிய குருந்து மலர்கின்ற காட்டின்கண்ணே நெருங்குதலும்; பெரிய ஒலியையுடைய நம்மூரின் மரங்கள் தோன்றா நிற்கும் ஆதலின் நின்தேர் விரைவிலே செல்லுவதாக!;
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 319 | 320 | 321 | 322 | 323 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காட்டின்கண்ணே, உள்ள, விரைவிலே, குருந்து, மெல்ல, மகளிர், புறத்து, நோக்கி, பார்ப்பன