நற்றிணை - 31. நெய்தல்
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
5 |
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, யானும் இனையேன்- ஆயின், ஆனாது வேறு பல் நாட்டில் கால் தர வந்த பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
10 |
உலவுத் திரை ஓதம் வெரூஉம் உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. |
தோழீ ! அமையாமல் வேறுவேறாகிய நாடுகளினின்றும் கலங்களைச் காற்றுச் செலுத்துதலாலே
வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலாவை ஒத்த மணற் பரப்பின் கண்ணுள்ள,
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண் குருகு நெடிய புன்னைக்கிளையிலிருக்கின்ற
முதிர்ந்த சூலையுடைய வெளிய குருகு; உலாவுதலையுடைய அலையோசைக்கு வெருவா நிற்கும்
வலிய நீர்ப்பரப்பினையுடைய கடற்சேர்ப்பனொடு மணவாத முன்பு; கரிய பெரிய நீர்பரந்த
கழியிடந் தௌ¤தலானே அதனை நோக்கி: சேஇறா எறிந்த சிறு வெள் காக்கை அதிலுள்ள செய்ய
இறாமீனைப் பற்றுதற்குப் பாய்ந்த கழுத்தளவு சிறிது வெண்மையுடைய நீர்க்காக்கை; பரவிய
பெரிய குளிர்ச்சியையுடைய கழியிடத்தைத் துழாவியெடுத்துத் தான் விரும்பிய பசிய
காலையுடைய பெடையை அழைத்து அதற்குக் கொடா நிற்கும்; சிறிய பூவையுடைய ஞாழலந்துறையும்
இனிதேயாயிருந்தது; அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு அத்துறையும்
வெறுப்புடைத்தாயிற்று; ஆதலால் பெரிய வருத்தமுற்ற உள்ளத்தில் அவன் பிரிந்ததனால்
ஆகிய துன்பம் பலவற்றையும் நினைந்து யானும் இத்தன்மையே னாயினென்காண்;
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது. - நக்கீரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - குருகு, வெண், சிறு, பெரிய, புன்னைக், அவன், நிற்கும், யானும், தான், எறிந்த, நோக்கி, காக்கை, கால், இரும், நினைந்து