நற்றிணை - 291. நெய்தல்
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
5 |
கண்டாங்கு உரையாய்; கொண்மோ- பாண!- மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, எல்லித் தரீஇய இன நிரைப் பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? |
பாணனே! மிக்க பெரிய முள்ளூர் மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி¢ பரியேறிச் சென்று; இராப் பொழுதில் அடித்துக் கொண்டு வரப்பட்ட கூட்டமாகிய பலவாய பசுவினிரைக்குரியவர் அவனோடெதிர்நின்று போர்முனையில் அழிந்தாற்போல; அழிந்து போகிய இவளது நலத்தை; நீ கண் கூடாகக் கண்டபடி; நீர் தன்னிலையிலிருந்து ஓடி வற்றிய அள்ளற் சேற்றின்கணுள்ள; நிணமிக்க தலையையுடைய கொழுத்த மீனை அருந்த வேண்டி நாரையினம்; குவிந்த வெளிய மணல்மேட்டில் ஏறியிருந்து; அரசரது ஒள்ளிய காலாட்படையின் கூட்டம்போல விளங்கித் தோன்றாநிற்கும்; தண்ணிய பெரிய கடனீர்த்துறையை உடைய காதலனுக்கு; உரைத்தாய் இல்லையே! அங்ஙனம் கூறாதது நினக்கு இயல்பாகுமோ? கூறியிருந்தால் முன்னரே அவன்வந்து கூடித் தலையளி செய்திருப்பன்; நீ உள்ளவாறு கூறாமையின் அவனும் வந்திலன்; இவளது நலனும் அழிந்ததுகாண்!;
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 289 | 290 | 291 | 292 | 293 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவளது, பெரிய, முள்ளூர், அருந்த, நீர்