நற்றிணை - 289. முல்லை
அம்ம வாழி, தோழி!- காதலர், நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே; வானம் நளி கடல் முகந்து, செறிதக இருளி, கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, |
5 |
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை, கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெரு மர ஒடியல் போல, அருள் இலேன் அம்ம; அளியேன் யானே. |
தோழீ ! வாழி ! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக!; இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் நம் காதலர் தாங்கூறிய சொல்லை அதனிலைமையினின்றும் பெயர்த்துக் கூறுபவரல்லர்; ஆதலின் குறித்த பருவத்து வருவர் அதன்முன் மேகமானது நெருங்கிய கடனீரை முகந்து செறிவு பொருந்த இருண்டு மிக்க மழையைப் பெய்து; கடிய குரலைக் காட்டி இடித்துக் கார்காலத்தைச் செய்து துன்புறுத்துதற்கு என்மாட்டு அமைந்திராநின்றது; இப்பொழுது அளிக்கத்தக்க தகுதியுடையேனாகிய யான்; அங்கே கொல்லையில் கோவலர்கள் இரவில் எரி கொளுத்திய வெட்டுண்ட பெரு மரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோய் கனற்றலானே அவரான் அருள் செய்யப் பெறேனாயிராநின்றேன்;
பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது. - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 287 | 288 | 289 | 290 | 291 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரு, அருள், யான், செய்து, முகந்து, வாழி, காதலர், அம்ம