நற்றிணை - 278. நெய்தல்
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, பொன்னின் அன்ன தாது படு பல் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
5 |
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின; கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. |
அடுத்த மரலின் மொக்குகளைப்போலப் பொருந்திய வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னையரும்புவாய் திறந்து மலராநிற்ப அங்ஙனம் மலர்ந்த பொன் போன்ற மகரந்தமிக்க பலவாகிய மலர்களில்; அணிந்து கொள்பவர் கொய்து தொடுத்தனபோக எஞ்சியன; கிளைகடோறும் நெய்மிக்க பசிய காயாகத் தூங்காநிற்கும்; கடற்றுறையுடைய தலைவனை; கழிக்கரையிலுள்ள சேறுபட்ட திரண்ட காலையுடைய அவனது தேரிலே பூட்டிய கோவேறு கழுதையின் குளம்பினெங்கும் சிவந்த இறாமீன்கள்¢ ஒடுங்கப்பட்டு அழிந்தன; அவனது மாலையிலும் மற்றெவற்றினும் காற்றால் எறியப்படும் வெளிய மணல் ஒடுங்கின ; ஆதலின் நினக்கே கணவனாமாறு விரைவில் வந்தனன் போலுமென்று இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்;
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது. - உலோச்சனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 276 | 277 | 278 | 279 | 280 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவனது, ஒடுங்கின