நற்றிணை - 27. நெய்தல்
நீயும் யானும், நெருநல், பூவின் நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் கழி சூழ் கானல் ஆடியது அன்றி, கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
5 |
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும் எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
10 |
சிறு பாசடைய நெய்தல் குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. |
தோழீ ! நேற்றைப் பொழுதில் நீயும் யானும் சென்று மலரின் நுண்ணிய தாதிற் பாய்ந்து விழுகின்ற வண்டினங்களைப் போக்கி; ஒழிந்த திரை கொழித்த வெளிய மணலடுத்த கழிக்கரை சூழ்ந்த சோலையிடத்து விளையாடியதன்றி; மறைத்து நாம் செய்த செயல் பிறிதொன்றுமில்லை; அங்ஙனம் யாதேனும் செய்ததுண்டென்றால் அது பரவா நிற்கும், நிற்க. அதனைப் பிறர் அறிந்து வைத்தாருமிலர்; அப்படியாக, அன்னை நம்மை நோக்கிப் பொய்கைதோறும் இறாமீனைத் தின்னும் குருகினம் ஒலிப்பச் சுறாவேறு மிக்க கழிசேர்ந்த இடத்து, கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு திரண்ட தண்டு நீண்டு நம்முடைய கண்களைப் போலப் பூத்தமை நோக்கியும்; நுண்ணிய பலவாகிய பசிய இலைகளையுடைய சிறிய நெய்தன் மலரைப் (போய்ப்) பறித்துச் சூடிக்கொண்மின் எனக் கூறினாள் அல்லள்; ஆதலின் அவள்தான் பெரிதும் என்ன கருதி யிருக்கின்றனள் போலும்;
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - குடவாயிற் கீரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பூத்தமை, கண்டு, சென்று, எனக், நுண்ணிய, அன்னை, பிறர், யானும், நீயும், நுண், திரை, நாம், நெய்தல்