நற்றிணை - 258. நெய்தல்
பல் பூங் கானல் பகற்குறி மரீஇ செல்வல்- கொண்க!- செறித்தனள் யாயே- கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத் திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார், பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த |
5 |
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட, அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள் |
10 |
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே. |
கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோர் கால்கள் வெம்பும்படி கீழைத்திசைமலையிலே தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றினுடைய இயக்கம் பொருந்திய பகற் பொழுதிலே; செல்வம் உடைய அகன்ற நகரின் கண்ணே வருகின்ற விருந்துகளைப் பாதுகாக்கும்படி; பொன்னாலாகிய தொடியையுடைய மகளிர் சமைத்து நிவேதித்து முற்றத்திலே பலியாகப் போட்ட கொக்கினது உகிர்போன்ற சோற்றைத் தின்று; பொழுதுபடும் அளவில் அகன்ற மீன்கடையில் அசைகின்ற நிழலிலே குவித்த பசிய இறாமீனைக் கவர்ந்துண்ட பசுமையாகிய கண்ணையுடைய காக்கை; ஆங்கு வினையின்றிக் காற்றாலசைகின்ற தோணியிலே பிணித்த பாய்மரத்திற் சென்று தங்காநிற்கும் மருங்கூர்ப்பட்டினம் போன்ற இவளுடைய; நெருங்கிய அழகும் ஒளியும் பொருந்திய வளைகள் கழல்வனவற்றைக் கண்டு; அன்னை இவ் வேறுபாடு முருகு அணங்கால் ஆகியது போலுமென உட்கொண்டு, இல்லின்கண்ணே செறித்துப் புறத்தேகவிடாது காவல் செய்வாளாயினள்; ஆதலின் இவள் வருதற்கியலாமையால் இல்வயிற் செறிப்பை நினக்கு உரைசெய்யும்படி கருதிய யான் இன்று பலவாய மலர்களையுடைய கழியருகிலுள்ள சோலையிலே பகற் பொழுதின்கண்ணே குறியிடத்து வந்து போகாநின்றேன்;
தோழி செறிப்பு அறிவுறீஇயது. - நக்கீரர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 256 | 257 | 258 | 259 | 260 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருந்திய, பகற், அகன்ற, இவள், காக்கை, மகளிர், குவித்த, கதிர்