நற்றிணை - 253. குறிஞ்சி
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், பள்ளி யானையின் வெய்ய உயிரினை, கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து எனவ கேளாய், நினையினை, நீ நனி: உள்ளினும் பனிக்கும்- ஒள் இழைக் குறுமகள், |
5 |
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, பலவு உறு குன்றம் போல, பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. |
ஒள்ளிய இழையை யணிந்த இளமகளாகிய தலைவி பெரிய முழக்கமுற்ற இடியுடனே மழை மாறாது சூழ்ந்து பெய்தலையுடைய பலவாகிய பனங்குடையிலிட்டுண்ணும் கள்ளினாலாகிய பேருணவையுடைய பாரியினது; பலாமரமிக்க பறம்புமலை போல; பெரிய அழகு அமைதலாலே இல்வயிற் செறிக்கப் பெற்று அரிய காவலுட்பட்டவளாயினாள்; அங்ஙனம் காவலுட்படுதலானே இக் களவொழுக்கத்தைக் கருதினாலும் நடுங்குந் தன்மையளாயிராநின்றாள்; நீதானும் புள்ளினம் தம்தம் கூட்டின்கண்ணே சென்று கூடியின்புற்றாலும் தலைவனுந் தலைவியுமாகக் கூடிப் புணர்ந்தாரைக் கண்ணாலே கண்டாலும்; படுக்கையிலே கிடந்த யானைபோல வெய்ய பெருமூச்சினையுடையையாய்; மிகுதிப்பட வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் அழிந்து யான் கூறுவனவற்றையுங் கேளாது; மிகக் கருதுந் தன்மையுடையையாயினை; இங்ஙனம் வருந்தியாவதென்னோ? இன்னே சென்று வரைவொடு வந்து புகுதுவாய்; வரைந்து கொள்வாய்; யான் கூறுவன இவைகளேயாகும்;
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 251 | 252 | 253 | 254 | 255 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், சென்று, பெரிய, அழிந்து, வெய்ய