நற்றிணை - 244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல், கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- |
5 |
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய் தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- செய்யாய்: ஆதலின் கொடியை- தோழி!- மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலை அம் தளிர் அன்ன, என் |
10 |
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே. |
தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!;
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. - கூற்றங்குமரனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 242 | 243 | 244 | 245 | 246 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - உரைத்தல், உயர்ந்த, எனது, போன்ற, ஒன்றாவது, அன்னைக்கு, மணம், ஒன்றோ, வண்டின், தளிர்