நற்றிணை - 239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
5 |
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
10 |
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? |
மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 237 | 238 | 239 | 240 | 241 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யாம், பொருந்திய, வழியின், மணல், புலவு, நெய்தல்