நற்றிணை - 233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று மட மா மந்தி மாணா வன் பறழ், கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் பெருங் கல் நாடனை அருளினை ஆயின், இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
5 |
கூறுவென் வாழி- தோழி!- முன்னுற நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, ஆன்றோர் செல் நெறி வழாஅச் சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே. |
தோழீ! வாழ்வாயாக!; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்!
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 231 | 232 | 233 | 234 | 235 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், ஆதலை, வந்து, தோழி, கடுவன்