நற்றிணை - 231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கைதொழும் மரபின் எழு மீன் போல, பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய, சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும் துறை புலம்பு உடைத்தே- தோழி!- பண்டும், |
5 |
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன, பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக் கானல்அம் கொண்கன் தந்த காதல் நம்மொடு நீங்காமாறே. |
தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது;
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது. - இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 229 | 230 | 231 | 232 | 233 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விளங்கிய, கொண்கன், பெரிய, தோழி, துறை, மரபின், கடற்