நற்றிணை - 221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
5 |
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேர்: விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
10 |
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, 'வந்தீக, எந்தை!' என்னும் அம் தீம் கிளவி கேட்கம் நாமே. |
பாகனே வரும்விருந்தை எதிரேற்க விருப்பங் கொண்ட பெரிய தோளையுடைய இளமையுற்ற எங் காதலி; மின்னல் போல் ஒளிவிடுதலையுடைய விளங்கிய அணிகலன்களால் எமது நல்ல மாளிகை யெங்கும் விளங்காநிற்ப நாட்காலையில் நடத்தலைப் பயின்றறியாத சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்ணையுமுடைய புதல்வன்; தூங்குமிடத்திலே சென்று உடம்பிலுள்ள துவட்சியோடு அப் புதல்வனை நெருங்கி நோக்கி; "எந்தாய்! வருக" என்று அழைக்கின்ற அழகிய இனிய வார்த்தையை நாம் கேட்டு மகிழும்படி; நீலமணியாற் செய்துவைத்தாற் போன்ற கரிய நிறத்தையுடைய கருங்காக்கணங்கொடி ஒள்ளிய காந்தளுடனே தண்ணிய புதல்தோறும் மலர்ந்து அழகுசெய்ய; பொற்காசினைத் தொங்க விட்டாற் போன்ற அழகையுடைய நல்ல மலரையுடைய சரக் கொன்றையின் ஒள்ளிய பூங் கொத்துக்கள் அதன் கிளைகள் தோறும் தூங்காநிற்ப; இவற்றால் நறுநாற்றத்தைப் பரப்பினாற் போன்ற சிவந்த முல்லை நிலத்தில்; நீர் அமையப் பெற்ற பெரிய வழியின் நீண்ட இடமெங்கும் சுவடு பிளப்ப இயங்குந் தொழிலையுடைய நினது நெடிய தேர் விரைவிலே செல்வதாக;
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 219 | 220 | 221 | 222 | 223 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்ற, நல்ல, ஒள்ளிய, பெரிய, புதல்வன், நீர், தேர், பூங், முல்லை