நற்றிணை - 208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப, விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, எவன் இனைபு வாடுதி?- சுடர் நுதற் குறுமகள்!- செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
5 |
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் கொன்னும் நம்புங் குரையர் தாமே; சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
10 |
இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? |
விளக்குகின்ற நெற்றியையுடைய இளமடைந்தையே!; நின் வலிமையெல்லாம் குறைந்து போய் விளங்கிய கலன்கள் நெகிழாநிற்ப; முத்துப்போன்ற கண்ணீர்த்துளி கொங்கையினிடையே விழுந்து நனைத்தலைச் செய்ய; நீங்காதபடி விம்மி விம்மி அழுகின்ற கண்ணுடனே; பெரிதும் அழிந்து வருந்தி என்ன கருதி வாடுகின்றனை?; நம் காதலர் நின்னைப் பிரிந்து செல்பவரல்லர்; அங்ஙனம் பிரிந்து சென்றாலும் சென்ற விடத்தே தமக்குண்டாகிய காம நோய் பொறுப்பவரல்லர்; அவர்தாம் நின்னிடத்துப் பெரியதொரு விருப்பமுடையவர் கண்டாய்; நின்பாற் சிறந்த அன்புடையரா யிராநின்றார், மிக்க மென்மையும் பொருந்தினவராயினார்; அவரைப் பிரிந்துறையும் நம்மினும்காட்டில் இரக்கமுற்று; தாம் சென்றவிடத்து ஈட்டுதற்குரிய பொருள் முற்றுப் பெறாதாயினும் அது நிமித்தமாக அங்கே நீட்டியாது உடனே மீண்டு வருவர்; அதன் மேலும் இப்பெரிய மேகத்தின் முழக்கமானது; இனிய துணையைப் பிரிந்தோரை நாடித் தருவது போலுமாய் இராநின்றது ஆதலின் நீ வருந்தாதே கொள்!
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது. - நொச்சி நியமங் கிழார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 206 | 207 | 208 | 209 | 210 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - விம்மி, நாடித், தருவது, பிரிந்து, வருவர், சிறந்த, அழிந்து, அல்லர், காதலர், பொருள்