நற்றிணை - 198. பாலை
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து ஓமை நீடிய கான் இடை அத்தம், முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் |
5 |
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர், சில் வளை, பல் கூந்தலளே, அவளே; மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் |
10 |
தந்தைதன் ஊர் இதுவே; ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே! |
சேய்மைக் கண்ணிருந்து வாராநின்ற அரசகுமாரனே!; யாமரம் உயர்ந்து ஓமை மரம் நீடிய காடிடையிட்ட சுரத்திலே; நேற்று நெடுந்தூரஞ் சென்ற என் மகள் போல இவள் என்கண் எதிரே படுதலால் என்கண் நீர் நிரம்பப் பெருகாநின்றது; அவள்தான் நுண்ணிய பலவாய வரி பொருந்திய அல்குலும் தோன்றிய சுணங்கும் நேர்மையுற்று விளங்கிய வெள்ளிய பற்களும் பொருந்திய பாதிரி மலர்ப் பிணையலும் சிலவாய வளையும் பலவாய கூந்தலும் உடையாள்; நிற்க, நும்மை அவள் தந்தையினூர் இடத்தில் விருந்தேற்று உபசரித்துத் தொழுகிற்பேன்; அவ்வண்ணம் நும்மை எதிர்கோடற்கு ஏற்ற மைபோன்ற கரிய அணலையும் பிடரியையும் வலிய நெடிய கையையும் வலிய வில்லினையும் அம்பையும் அளந்தறியா வண்மையையும் கள்ளுணவையுமுடைய தந்தையினது ஊர் இதுவே கண்டீர்; யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்; எனது ஆற்றாமையைக் கண்ட நீயிர் அவளை எதிர்கண்டு பேசிய வகையை நுவலுவீராயின் நுமக்கு அறத்தாலாய புகழ் உண்டாகுக!
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது. - கயமனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 196 | 197 | 198 | 199 | 200 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொருந்திய, பலவாய, நும்மை, வலிய, அவளை, என்கண், சென்ற, மகள், நீடிய, நீர், இதுவே, யானே, உயர்ந்து