நற்றிணை - 191. நெய்தல்
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த வண்டற் பாவை வன முலை முற்றத்து, ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் கண்டல் வேலிக் காமர் சிறுகுடி, |
5 |
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி, அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும் என் நோக்கினளே அன்னை; நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின், அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி |
10 |
நறும் பூங் கானல் வந்து, அவர் வறுந் தேர் போதல் அதனினும் அரிதே. |
சிறிய பூவையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒள்ளிய பூங்கொத்துக்கள்; அழகிய கலன்களையுடைய சிறுமியர் நெடிய மணலில் வண்டலாட்டு அயரும்வழி; வண்டல் மண்ணாலே செய்த பாவையின்; அழகிய கொங்கையில் ஒள்ளிய வரியையுடைய சுணங்குபோல மெல்லிதாகப் படுமாறு பரவாநிற்கும்; கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த கண்டார்க்கு விருப்பம் வருகின்ற சிறிய குடித்தெருவின் கண்ணே நேற்றிரவில் ஒரு தேர் வந்துளதேயன்றோவென உரையாடி; இவ்வூர் முழுதும் அலரெழுந்ததாக; அவ்வலரைச் செவியில் ஏறட்டுக் கொண்ட நம்மன்னை என் போல்வார் பலருமிருப்ப அவருள் என்னையே குறிப்பாக நோக்கா நின்றனள்மன்; நாளைக் கழிக்கரையிலுள்ள முள்ளியினுடைய நீலமணி போலும் மலரைக் கொய்யேனாயின் என் மிக்க அழகு உளதாவது அரியதாகும்; இஃதிவ்வண்ணமாக, நீலமணி போலும் கரிய கழியிடத்துள்ள நறிய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை யணையாது தேர் மேல் வறிதே செல்லுதல்; எம்மை இல்வயிற்செறிக்கும் அதனினுங் காட்டில் அரிய துன்பமுடையதாகும்;
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 189 | 190 | 191 | 192 | 193 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தேர், அழகிய, நீலமணி, போலும், ஒள்ளிய, எம்மை, அவர், கண்டல், அரிதே, வந்து, தேன், சிறிய