நற்றிணை - 171. பாலை
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
5 |
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, யாங்கு வல்லுந மற்றே- ஞாங்க வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
10 |
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? |
நீருண்ணும் நசையை மேற்கொண்ட வருத்தத்தையுடைய பிடியானை; வெப்பமிக்க சிறுகுன்றுகளைச் சூழவுடைய வெவ்விய மலைப்பக்கத்திலுள்ள நிலத்தின்கண்ணே செல்லுதலும்; அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலையையுடைய யானைக் கன்று; சேரியிலுள்ள மாதர் தம்முள்ளத்தே துண்ணெனும்படி ஊரிலுள்ள பசுவின் கன்றொடு சேர்ந்து அச் சேரியின் கண்ணே புகுதாநிற்கும்; மலைநாடன் நம்மைக் கைவிட்டுப் பலவாகிய மலைகளிடைப்பட்ட கடத்தற்கரிய சுரநெறியிலே செல்லின்; கட்டிய கம்மத் தொழிலையுடைய தௌ¤ந்த ஓசையையுடைய மணிகளைக் களையப்பட்ட வேற்படையையொப்ப; பேய்கள் நிலைகொண்டு உலாவுகின்ற பொழுது அமைந்த நடுயாமத்தில்; ஆசையோடு நெஞ்சுகலந்து அவனுடைய மார்பின் மேல் நெருங்கப் படுத்தலைப் பொருந்தின கண்கள்; இனி எவ்வாறு துயிலல் வல்லனவாகும்?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - கண்ணே, பொழுது