நற்றிணை - 170. மருதம்
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
5 |
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? |
மடப்பத்தையுடைய கண்பார்வையையும் மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையும் பருத்த தோளையும்; நேர்மையாகிய வெளிய பற்களையும் திரண்டு நெருங்கிய துடைகளையுமுடைய; ஒப்பில்லாத இவ் விறலி பிணைத்த அழகிய தழையுடையையுடுத்துத் திருவிழாச் செய்யும் இவ்விடனெங்கும் பொலிவெய்துமாறு வந்து நிற்றலாயினள் காணுங்கோள்!; நம் காதலனை இன்னும் வேறொரு பரத்தைபால் இவள் தூது சென்று செலுத்தாதபடி நாம் பாதுகாக்கற் பாலம்; எழுங்கோள்! எழுங்கோள்!, இவள் நன்மை தலைப்படின் இவள் கொண்ட காரியம் கைகூடுமாயினோ!; ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல; பலர் கூடிய நம்முடைய கூட்டமும் ஒழியவேண்டியதன்றி வேறுயாது பயன்படுங்கண்டீர்?
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - இவள், சென்று, எழுங்கோள், மலையனது, ஆரியர், பலர், வந்து