நற்றிணை - 136. குறிஞ்சி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும், அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, என்னை- வாழிய, பலவே!- பன்னிய மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய |
5 |
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல, நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து, தோள் பழி மறைக்கும் உதவிப் போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே. |
10 |
திருந்திய கோற்றெழில் அமைந்த ஒளி பொருந்திய தோள்வளையை விரும்பி அது பெறாமையாலே யான் அழுதலும்; என் தந்தை தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர்க்கு அவர் விரும்பியதைக் கொடாது ஆராய்ந்து அந் நோய்க்குத் தக்க மருந்துகொடுத்த அறவாளன் போல; யாவராலும் புகழப்படுகின்ற மலையையுடைய நாட்டையுடைய நங் காதலனும் நாமும் ஒருவரையொருவர் இடையிடை விட்டுப் பிரிகின்றதன் உண்மை சிறிதளவுதானும் அறிந்தவன் போல; யான் வேண்டாமென்று கழற்றினாலும் கழன்று நீங்காது ஒருபொழுது கழன்றாலும் தன்னெல்லை கடவாமே தங்கி எனக்குண்டாகிய தோளின் பழியை மறைக்கின்ற; உதவியையுடைய கெடாத பொன்னாலாகிய தோள்வளை செய்து தந்து செறிக்கச் செய்தனன்; ஆதலின் அவன் நெடுநாள்காறும் வாழ்வானாக;
சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது. - நற்றங் கொற்றனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 134 | 135 | 136 | 137 | 138 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், நீங்காது, உண்மை