நற்றிணை - 120. மருதம்
தட மருப்பு எருமை மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
5 |
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, அட்டிலோளே அம் மா அரிவை- எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
10 |
சிறு முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. |
வளைந்த கொம்பினையுடைய எருமையின் இளநடையையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காட்சி மிகுதியால் யாவரும் காணத்தக்க நல்ல மனையின்கண்; வளைந்த குண்டலத்தைக் காதிலணிந்த செழுவிய செய்ய பேதைமையையுடைய காதலி சிறிய மோதிரஞ் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக; வாழையிலையைக் கொய்துவந்து அடிக்காம்பு பருத்திருத்தலின் அதனை வகிர்ந்து பரிகலமமைத்து அடிசிலாக்குதலாலே புகைபடிந்து அமர்த்த கண்களையுடையளாய்; அழகுபெறப் பிறை போன்ற நுதலினுண்டாகிய சிறிய நுணுகிய பலவாய வியர்வை நீரை அழகிய முன்றானையினுனியாலே துடைத்துக்கொண்டு; நம்மீது புலவி மிக்கு அடிசிற்சாலையிடத்திராநின்றாள்; இப்பொழுது விருந்தினராய் வருபவர் எம்முடன் வருவாராக! அங்ஙனம் வரின்; இந்த அழகிய மாமைநிறத்தையுடைய அரிவை சினங்கொண்டு ஒருபொழுதும் கண் சிவப்பதில்லை, அன்றியும் குறுமுறுவல் கொண்ட முகத்தினளாய் இருப்பள்; ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற எயிறு சிறிது தோன்றுமாறு நகை கொண்ட முகத்தையாம் காண்பேமாகி யிராநிற்போம்;
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது. - மாங்குடி கிழார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 118 | 119 | 120 | 121 | 122 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிறு, கொண்ட, சிறிய, அழகிய, எயிறு, வளைந்த, அரிவை, செறித்த, விரல், அமர்த்த, பிறை