நற்றிணை - 11. நெய்தல்
பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
5 |
புணரி பொருத பூ மணல் அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, வலவன் வள்பு ஆய்ந்து ஊர, நிலவு விரிந்தன்றால் கானலானே. |
அவர் செய்த குறி இடையீடுபட்டுத் தவறுதலாலே; சூடாது கிடந்த பூமாலை போல நின் மெய் வாடினையாகி; அயலில் எழுதலையுடைய பழிச் சொல்லைக் கருதி; இனித் திண்ணமாக அவர் நம் பால் வருவாரல்லர் என்னும் புலவியை உட்கொள்ளாது; நின் நெஞ்சத்து அதனை ஒழிப்பாயாக! புணரி பொருத பூ மணல் அடைகரை அலைவந்து மோதிய இளமணல் அடுத்த கடற்கரையின் கண்ணே; தாம் ஊர்ந்து வருகின்ற தேரின் ஆழியிடத்துப் படாதவாறு ஞெண்டுகளை விலக்கிப் பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துமாறு, கானலான் நிலவு விரிந்தன்று கானலிடத்து நிலவு விரிந்தது காண்!
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிலவு, நின், அவர், மணல், அடைகரை, பொருத, புணரி, என்னும், மெய், குறி