நற்றிணை - 10. பாலை
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர! இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
5 |
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன நின் பிழையா நல் மொழி தேறிய இவட்கே. |
மலர்கள் விளங்கிய பொழில் சூழ்ந்த ஊரையுடையோனே !; இனிய கடுப்புடைய கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்ப்படையை உடைய வலிமிகு சோழப் பெருவந்தர்களே, கொங்கரைப் பணியவைக்கப் பழையனின் வேலைத்தான் நம்பியிருந்தனராம். இந்தப் பழையன், போர் எனும் ஊரின் தலைவர். யானைப்படை கொண்டவர். ஊர்க்கிழவர்கள் துணையின்றி நடுவணரசுகள் வாழ்ந்ததில்லை போலும்.
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -