முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 95. குறிஞ்சி - தலைவன் கூற்று
குறுந்தொகை - 95. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு, “ஒரு குறமகள்பாற் கொண்ட காமத்தால் என்கண் இஃது உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)
மால்வரை இழிதருந் தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. |
5 |
- கபிலர். |
முடிபு: குறுமகளது சாயல் என் உரனை அவித்தன்று.
கருத்து: நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 95. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, பெரிய, சாயல், எட்டுத்தொகை, சங்க, அருவி