முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 9. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 9. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவிடத்துத்தோழி, "தலைவனது பரத்தைமையாகிய கொடுமையால் துன்புறுபவளாயினும்தலைவி அவன் செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்திற் சிறப்புற்றிருக்கின்றாள்; ஆதலின் சினந்திலள்” என்று கூறுமுகத்தால் தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.).
யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் |
5 |
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே. |
|
- கயமனார். |
முடிபு: மாயோள் மெய் சாயினள்; துறைவன் கொடுமை நாணிக் கரப்பாடும்; ஆதலின் அவள் யாயாகியள்.
கருத்து: தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனைஏற்றுக் கொள்வாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 9. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, ஆதலின், உடைய, மருதம், தலைவனது, குறுந்தொகை, கூற்று, தலைவி, கொடுமை, நெய்தல், எட்டுத்தொகை, சங்க, துறைவன்