முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 88. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று
(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி நாமே. |
5 |
- மதுரைக் கதக்கண்ணனார். |
முடிபு: தோழி, மலைநாடன் வருதலும் வரூஉம்; நாம் வடு நாணலம்.
கருத்து: தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாம், வரூஉம், எட்டுத்தொகை, சங்க, வருதலும்