முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 86. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தொகை - 86. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் யாமத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து ஊதை தூற்றம் கூதிர் யாமத்து ஆனுளம் புலம்புதொ றுளம்பும் |
5 |
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. | |
- வெண்கொற்றனார். |
முடிபு: கூதிர்யாமத்து ஆன் உளம்பும் மணியின் குரலைக் கேட்குநர் பிறகும் உளர் கொல்?
கருத்து: தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் யானொருத் தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 86. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மணியின், கேட்குநர், எட்டுத்தொகை, சங்க