முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 64. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிவை ஆற்றாமலிருந்த தலைவியை நோக்கி, "அவர் நின் துன்பத்தையறிவர்; ஆதலின் விரைவில் மீளவர்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்" என்று தலைவி கூறியது.)
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்றம் நோக்கி மாலை மடக்கண் குழவி அலவந் தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர்தோழி சேய்நாட் டோரே. |
5 |
- கருவூர்க் கதப்பிள்ளை. |
முடிபு: தோழி, சேய்நாட்டோர் நோயேமாகுதல் அறிந்தும் சேயர்.
கருத்து: தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, இன்னும், முல்லை, குறுந்தொகை, கூற்று, தோழி, வந்திலர், பார்த்து, தலைவர், அறிந்தும், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, அவர், அறிந்தவராயிருந்தும்