முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 61. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 61. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறானாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலின் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்றிலம்" என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின் ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் பொய்கை யூரன் கேண்மை |
5 |
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. | |
- தும்பிசேர் கீரனார். |
முடிபு: உற்று இன்புறேமாயினும் ஊரன்கேண்மையைச் செய்து இன்புற்றனெம்; வளை செறிந்தன.
கருத்து: தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறவே மாயினேம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 61. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், செறிந்தன, குறுந்தொகை, கூற்று, வளைகள், செய்து, சங்க, எட்டுத்தொகை, நட்பை