முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 59. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 59. பாலை - தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர்" என்று தோழி கூறியது.)
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் சுரம்பல விலங்கிய அரும்பொருள் |
5 |
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. | |
- மோசி கீரனார். |
முடிபு: நறுநுதல் மறப்பரோ? பொருள் நிரம்பா ஆகலின் நீடல் இன்று.
கருத்து: தலைவர் விரைவில் மீளுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 59. பாலை - தோழி கூற்று, தலைவர், இலக்கியங்கள், தோழி, குறுந்தொகை, கூற்று, பாலை, நிரம்பா, பொருள், ஆகலின், மறப்பரோ, விரைவில், எட்டுத்தொகை, சங்க, மீளுவர்