முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 57. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 57. நெய்தல் - தலைவி கூற்று
(தாய் முதலியவர்களாற் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவேம் ஆகிய வுலகத் |
5 |
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. | |
- சிறைக்குடி ஆந்தையார். |
முடிபு: ஒருவேமாகிய புன்மையினின்றும் நாம் உயற்கு உடன் உயிர் போகுகதில்ல.
கருத்து: தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 57. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நாம், நெய்தல், குறுந்தொகை, கூற்று, உயிர், எட்டுத்தொகை, சங்க, ஒருங்கே