முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 46. மருதம் - தலைவி கூற்று
குறுந்தொகை - 46. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றமாட்டாளென்று கவலையுற்ற தோழியை நோக்கி, “என்னைத் துன்புறுத்தும் மாலைக் காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டிலும் உளவாதலின் அவருக்கும் அவற்றால் துன்பம் உண்டாகும்; அதனால் அவர் விரைவில் வருவாரென்று எண்ணி யான் ஆற்றுகின்றேன்” என்று தலைவி கூறியது).
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து எருவினுண் தாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் |
5 |
புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. |
|
- மாமலாடனார். |
முடிபு: தோழி, அவர் சென்ற நாட்டு, மாலையும் புலம்பும் இன்று கொல்?
கருத்து: என்னுடைய பிரிவினால் தலைவரும் துன்புறுவர் ஆதலின் விரைந்து வருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 46. மருதம் - தலைவி கூற்று, தலைவி, சென்ற, இலக்கியங்கள், மருதம், குறுந்தொகை, கூற்று, மாலையும், அவர், தோழி, புலம்பும், மாலைக், எட்டுத்தொகை, சங்க, காலமும், தனிமையும்