முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 391. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 391. முல்லை - தலைவி கூற்று
(பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.)
உவரி யொருத்தல் உழாது மடியப் புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற் கடிதிடி உருமிற் பாம்புபை அவிய இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் |
5 |
கையற வந்த பையுள் மாலைப் பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம் நீர் நனந்தலை புலம்பக் கூஉந் தோழி பெரும்பே தையவே. |
|
- பொன்மணியார். |
முடிபு: தோழி, மழை ஒருத்தல் மடியப் பாம்பு பை அவிய மயங்கி வீழ்ந்தன்று; மழை தழீஇ வந்த மாலை கூஉம்; பெரும் பேதைய.
கருத்து: கார்காலம் வந்தமையின் யான் வருந்துவேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 389 | 390 | 391 | 392 | 393 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 391. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, வந்த, குறுந்தொகை, தோழி, மயங்கி, அவிய, மயில்கள், எட்டுத்தொகை, சங்க, மடியப்