முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 388. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 388. பாலை - தோழி கூற்று
(தலைமகள் தன்னுடன் வருதற்கு உடம்பட்டமையை உணர்ந்ததலைவன் பாலைநிலத்தின் இன்னாமையையும் அதில் நடக்க மாட்டாத தலைவியினது மென்மையையும் கருதிப் போதற்கு ஒருப்படானாக,“நும்மொடு வரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்” என்று தோழிகூறிச் செலவு உடம்படச் செய்தது.)
நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடா தாகும் கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன முளிசினை பிளக்கு முன்பின் மையின் |
5 |
யானை கைமடித் துயவும் கானமும் இனியவாம் நும்மொடு வரினே. |
|
- அவ்வையார். |
முடிபு: குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும்இனிய ஆம்.
கருத்து: தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 386 | 387 | 388 | 389 | 390 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 388. பாலை - தோழி கூற்று, பாலை, இலக்கியங்கள், வரின், குறுந்தொகை, தோழி, கூற்று, நும்மொடு, நும்மோடு, யானை, சங்க, எட்டுத்தொகை, குவளை