முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 362. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 362. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் நோய் முருகனால் வந்ததெனக் கருதித் தாய் வெறியாட்டெடுத்தவிடத்துத் தோழி வெறியாடும் வேலனை நோக்கி, “தலைவி யின் நோயைப் பரிகரிக்க எண்ணி இடும் இப்பலியை அந்நோய்க்குக்காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?” என்று கூறும் வாயிலாகஅறத்தொடு நின்றது.)
முருகயர்ந் துவந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய |
5 |
விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே. |
|
- வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார். |
முடிபு: வேல, சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்:மறிகொன்று, நுதல் நீவிக் கொடுத்தியாயின் சிலம்பன் அகலமும் பலிஉண்ணுமோ?
கருத்து: இவளுக்குற்ற நோய் ஒரு தலைவனால் வந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 360 | 361 | 362 | 363 | 364 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 362. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சிலம்பன், அகலமும், உடையேன், உண்ணுமோ, நோய், எட்டுத்தொகை, சங்க, தலைவனது, மார்பும்