முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 359. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 359. மருதம் - தோழி கூற்று
(வாயில் பெறாத தலைமகன் மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத்தானே புக்குப் பாயலிற் புதல்வனைத் தழுவிக் கொண்ட காலத்தில் தலைவி ஊடல்தணிந்ததைத் தோழி பாணனுக்குக் கூறியது.)
கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம மாலை விரிந்த பசுவெண் ணிலவிற் குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற் புதல்வற் றழீஇயினன் விறலவன் |
5 |
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே. | |
- பேயனார். |
முடிபு: பாண, விறலவன் புதல்வற்றழீஇயினன்; தாய் அவன்புறங்கவைஇயினள்; கண்டிசின்; பண்புடைத்து!
கருத்து: தலைவி புலவி தணிந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 357 | 358 | 359 | 360 | 361 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 359. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், தலைவி, குறுந்தொகை, கூற்று, விரிந்த, விறலவன், எட்டுத்தொகை, சங்க