முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 357. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 357. குறிஞ்சி - தோழி கூற்று
(வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவியை நோக்கி, “நின் தோள்கள் தலைவனோடு நீ நட்புச் செய்யாததன்முன் நல்லனவாக இருந்தன” என்று தோழி கூறியது.)
முனிபடர் உழந்த பாடில் உண்கண் பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள் மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன் |
5 |
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை மின்படு சுடரொளி வெரூஉம் வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
|
- கபிலர். |
முடிபு: தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லைமன்னிய.
கருத்து: தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்புஉண்டாகின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 355 | 356 | 357 | 358 | 359 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 357. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, யானை, வெற்பன், தலைவன், நல்ல, வரையாது, எட்டுத்தொகை, சங்க, தோள்கள்