முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 352. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 352. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, “தலைவர் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகின்றது” என்பது படத் தலைவி கூறியது.)
நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை அகலிலைப் பலவின் சாரல் முன்னிப் பகலுறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை |
5 |
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே. | |
- கடியலூர் உருத்திரங்கண்ணனார். |
முடிபு: தோழி, அவர்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்.
கருத்து: தலைவன் பிரிந்த பின்னர் மாலைக்காலம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 350 | 351 | 352 | 353 | 354 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 352. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மாலைக்காலம், குறுந்தொகை, பாலை, கூற்று, போகும், தோழி, நோக்கி, அறிவேன், தலைவன், எட்டுத்தொகை, சங்க, பிரிந்த, காலத்தில்