முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 349. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 349. நெய்தல் - தலைவி கூற்று
(தலைமகன் பரத்தையரிடமிருந்து வந்த காலத்தில் தோழி "நம்நலந்தாவெனக் கேட்போம்" என்றவிடத்து, "ஒருவருக்குக் கொடுத்தபொருளைமீட்டுப் பெறுதலினும் உயிரிழத்தல் சிறந்தது" என்று தலைவிகூறியது.)
அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும் தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வாம் என்றி தோழி கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
5 |
கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. |
|
- சாத்தனார். |
முடிபு: தோழி, துறைவற்றொடுத்து நலம் கொள்வா மென்றி;கொள்வாம்; கொடுத்தவை தாவென் சொல்லினும் நம் இன்னுயிரிழப்புஇன்னாதோ?
கருத்து: தலைவனை நலந்தாவெனக் கேட்டல் தக்கதன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 347 | 348 | 349 | 350 | 351 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 349. நெய்தல் - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, கொள்வாம், நெய்தல், தலைவி, குறுந்தொகை, தாவென், சொல்லினும், கொடுத்தவை, சங்க, நாரை, எட்டுத்தொகை