முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 348. பாலை - தோழி கூற்று
குறுந்தொகை - 348. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிவானென்றறிந்து வருந்திய தலைவியை நோக்கி,"அவர் போவாராயின் நின்துன்பத்தைக் காணாது செல்வாரோ? செல்லார்"என்று தோழி கூறியது.)
தாமே செல்ப வாயிற் கானத்துப் புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய் இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற் பூணக வனமுலை நனைத்தலும் |
5 |
காணார் கொல்லோ மாணிழை நமரே. | |
- மாவளத்தனார். |
முடிபு: மாணிழை, நமர் தாமே செல்பவாயின், காணார் கொல்லோ!
கருத்து: தலைவர் நின் வருத்தத்தை யறிந்து போதலை யொழிவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 346 | 347 | 348 | 349 | 350 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 348. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, மாணிழை, தலைவர், நின், கொல்லோ, தாமே, எட்டுத்தொகை, சங்க, முல்லைக், காணார்