முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 34. மருதம் - தோழி கூற்று
குறுந்தொகை - 34. மருதம் - தோழி கூற்று
(தலைவியை வரைந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் வரைவானென்னும் செய்தியைக் கேட்டு இதுகாறும் உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவன் வரைவொடு வந்தமையைத் தலைவிக்கு உணர்த்தியது.)
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமியர் உறங்கும் கௌவை யின்றாய் இனியது கேட்டின் புறுகவிவ் வூரே முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் |
5 |
குட்டுவன் மாந்தை யன்னவெம் குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. |
|
- கொல்லிக் கண்ணனார். |
முடிபு: நுதற்கிழவனும் அவனே; கௌவை இன்றாய் இவ்வூர் இனியது கேட்டு இன்புறுக.
கருத்து: தலைவன் இனி விரைவில் மணந்து கொள்வான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 34. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, கேட்டு, குறுந்தொகை, மருதம், கூற்று, கௌவை, குருகின், கொள்வான், வரைவொடு, இனியது, அவன், எட்டுத்தொகை, சங்க, வரைந்து, செய்தியைக், தலைவன்