முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 333. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 333. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் நோய் மிகுதியைக் கண்ட தோழி, “அறத்தொடு நின்றுதலைவனது வரவை நமர் ஏற்றுக் கொள்ளச் செய்வேன்” என்றது.)
குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன் புனமுண்டு கடிந்த பைங்கண் யானை நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன் பணிக்குறை வருத்தம் வீடத் |
5 |
துணியின் எவனோ தோழிநம் மறையே. | |
- உழுந்தினைம்புலவனார். |
முடிபு: தோழி, நாடன் வருத்தம் வீட நம்மறை துணியின் எவன்?
கருத்து: யான் அறத்தொடு நிற்பேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 331 | 332 | 333 | 334 | 335 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 333. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, வருத்தம், குறுந்தொகை, குறிஞ்சி, துணியின், குறிய, நாடன், யானை, எட்டுத்தொகை, சங்க, மகளிர்