முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 329. பாலை - தலைவி கூற்று
குறுந்தொகை - 329. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழிவற்புறுத்தினாளாக, "யான் ஆற்றுவேன்; என்கண்கள் துயிலாவாகிஅழுதன" என்று தலைவி கூறியது.)
கான விருப்பை வேனல் வெண்பூ வளிபொரு நெடுஞ்சினை உகுத்தலி னார்கழல்பு களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம் பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து பயிலிருள் நடுநாள் துயிலரி தாகித் |
5 |
தெண்ணீர் நிகர்மலர் புரையும் நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. |
|
- ஓதலாந்தையார். |
முடிபு: சுரம் இறந்தவர்ப் படர்ந்து துயில் அரிதாகிக் கண்ணிற்குப்பனி எளிது.
கருத்து: யான் ஆற்றியிருப்பவும் என் கண்கள் துயிலுதலொழிந்துஅழுதன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 327 | 328 | 329 | 330 | 331 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 329. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, படர்ந்து, இறந்தவர்ப், எட்டுத்தொகை, சங்க, யான்